ஏன்?, எதற்கு? என்ற கேள்விகளிற்கு விடையில்லாத போதும் இப் பதிவை எழுத வேண்டும் என்று சிலமணி நேரமாக என் மன உறுத்தலால் பதிகிறேன்.
ஆண்டுகள் பல கடந்து ஓர் ஆவண பதிவாய்,
அராஜகம், ஆவேசம், ஆற்றாமை என்பதின் அனுபவ பாடமாய்
பல்கலை வாழ்வின் ஓர் அங்கமாய் இருக்கட்டும் என தொடர்கிறேன்.
சைக்கிள் பார்க்கிலிருந்து OCB வரை சாதாரணமாக விடிந்த போதும் அடுத்த கணம் நம் சக மாணவர்கள் நின்ற விதமே ஓரு (Seen) சீனுக்கான Intro வாக இருந்தது
இன்றைய நாள் பலருக்கு வலிகளும் வேதனைகளும் நிறைந்த நாள்,
பயங்களும், பயங்கரங்களும் பற்றிக்கொண்ட நாள்,
அவமானமும் ஆக்ரோசமும் ஆர்பரித்த நாள்,
ஆனால் எனக்கு
நாம், நமக்கு, எங்கட பட்ச் (Batch) என்ற
அனைவருக்கும் வரவேண்டிய ஆணவம் வந்த நாள்
Offer அ(டி)ளிப்பு தந்த போதும், அசையாது நின்ற மாணவர்களும்
கண்டவுடன் கண்கலங்கி நின்ற மாணவிகளும்
தீவிரவாதிகளும், தீர்ப்பு தந்தோரும்
கண்முன்னே நின்றாலும் கடைசி நேர OB யில்
கண்திறந்து கண்ணுறங்கிய நாம் தான் கில்லாடிகள்
நமக்கள் எத்தனையோ குழுக்கள், முறால்கள், கஜால்கள்
வந்த போதும்,
இனியும் முற்றுப்பெறாது தொடரும் என்ற போதும்,
இன்றைய நாள் பொழுதில்.
சிவகாசி சோலையம்மாக்களும், ஏகப்பட்ட சொர்ணாக்காகளும் சேர்ந்து நின்ற வேளையும்,
KIK இல்லாத மகஜர் அனுப்புவதற்கு மறுப்பு தெரிவித்த போதும்,
Mixing இல்லாத Soda என்று சீறிப் பாய்ந்த போதும்,
கெத்தாக சொல்லலாம் நாம் "நண்பேன்டா" என்று.
பின்விளைவுகள் பல வால் பிடித்து வரலாம்
முன்கோபங்களால் சில முரண்பாடுகள் வரலாம்
என்னுடைய மனதளவில்
இன்றைய இந்நாள் பொழுதை
ஓற்றுமைக்கான உதாரணமாய்
ஐயமின்றி சொல்வேன்
Nishali Ni
No comments:
Post a Comment